Category போட்டிகள்

இராஜராஜ சோழர் காலக் கதைகள் – இராஜாராஜ சோழரின் சதய விழா வரலாற்றுச் சிறுகதைப் போட்டி 2023

தளி அறக்கட்டளை மற்றும் Heritager.in | The Cultural Store சார்பாக இராஜாராஜ சோழரின் 1038 சதய விழாவை முன்னிட்டு, இராஜராஜ சோழர் காலத்தில் நடந்த போர்கள், மக்கள் வாழ்வியல் முறைகள், கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு செய்திகள், அகழாய்வுகள், கோயில் சமூக, பொருளாதராம் மற்றும் நிர்வாகம் போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு “இராஜராஜ சோழர் காலக்…

மரபுசார் வினாவிடை

1. தென்னகம் முழுவதும் வணிகம் செய்த, திசையாயிரத்து ஐந்நூற்றவர் வணிக்குழு ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தை எவ்வாறு அழைத்தது? விடை: ஏறுசாத்து, இறங்கு சாத்து ஆகும். சாத்து என்பது, வணிகத்திற்காக எடுத்துச்செல்லும் பொருட்களையும், அதனை எடுத்து செல்லும் வணிகக் கூட்டத்தைக் குறிக்கும்.

சங்ககால சிறுகதைகள் போட்டி – (புறநானூறு)

புறநானூறு பாடல்களை அடிப்படையாகக் கொண்டு புனைவுச் சிறுகதைகளைப் போட்டிக்கு அனுப்பலாம். சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மின்னூலாக வெளியிடப்படும். போட்டியின் விதிமுறைகள்: Unicode எழுத்துக்களில் Word வடிவில் கதைகளை அனுப்ப வேண்டும். கதையின் நீளம் குறைந்த பட்சம் 3000 முதல் அதிகபட்சம் 5000 சொற்கள் இருக்கலாம். புறநானூறு பாடல்களை அடிப்படையாகக் கொண்ட கதை கரு இருக்க வேண்டும்.…

யானை கதைகள் – சிறுவர் சிறுகதைப் போட்டி

யானைகள் பற்றி வரும் தலைமுறைக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக இலக்கிய, வரலாற்று, செய்தித்தாள், யானை வாழ்வாதாரப் பிரச்சனைகள், யானை-மனித மோதல்கள் போன்ற, தரவுகள் அடிப்படையில் சிறுவர்கள் படிக்கக்கூடியக் கதைகளாக உருவாக்கி இந்தப் போட்டி அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதைகள் தொகுத்து வெளியிடப்படும். வெற்றியாளருக்கு மின் சான்றிதழ்கள் வழக்கப்படும்.. கதைகள் வந்து சேரவேண்டியக் கடைசி நாள்: 15…

நெற்றிக்கண் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #21

“டக் டக் டக்” கடந்த சில மாதங்களாக சதுர்வேதி மங்கலத்து மக்களுக்குப் பழகிப் போய் விட்டிருந்த அந்த ஓசை அதிகாலையிலேயே கேட்க ஆரம்பித்தது. கைலாசநாதர் கோவிலையொட்டி அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பந்தலில் சிற்ப வேலை அதிகாலையிலேயே தொடங்கிவிட்டிருந்தது. பொருநை நதியின் ஒரு கிளையான சிற்றாறு, திரிகூட மலையில் துவங்கிய தன் நெடும் பயணத்தில் பெரும்பகுதியைக் கடந்து விட்டிருந்ததால்…

ஒரு நாள் ஒரு கனவு – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #20

 ஆடி மாதக் காற்றின் தாலாட்டில் இப்பூமிப் பந்து அயர்ந்து உறங்கிக்  கொண்டிருந்தது. சூரியன் தன் கதிர் விழிகளைத் திறக்கலாமா? வேண்டாமா என  யோசித்துக் கொண்டிருந்த நேரமது. சூர்யா தன் போர்வையை நன்கு இழுத்துப்  போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தான். ‘தடக் தடக்‘ என்று குதிரைகளின்   குளம்படிச் சத்தம் அவன் காதுகளை கிழித்துக் கொண்டிருந்தது. “பழையாறைக்கு  வா!” என்ற…

மணிமுடி – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #19

அத்தியாயம் 1 இரத்தவாடை எங்கும் இரத்த வாடை வீசியது குருதியும் மனித தசைகளும் பின்னிப்பிணைந்து மண்ணில் காட்சியளித்தது கை கால் தலை போன்ற அனைத்து மனித உறுப்புகளின் மேலும் களிறுகளின் கால்பட்டு கூழாகி போயிருந்தது. ஈழமே இடு காடாக காட்சியளித்தது இவை அனைத்தையும் கண்டு பலத்த பசியுடன் ருசிக்க வட்டமிடும் பல பிணந்திண்ணி வல்லூர்களில் ஒன்று…

சகியர் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #18

வீரமாதேவி அந்தப்புறம் எல்லாமும் தயாராகி விட்டது. நெருங்கிய ஆண், பெண் குழந்தைகள் என அத்தனை உறவுகளும் வாய் பொத்தி கண்கலங்கி பரிதவித்து நிற்கின்றன.  அவளுக்கு மிக அருகே நின்றிருந்த பணிப்பெண்களின் மேனியில் கூட அடுத்தவர் கண்டுக் கொள்ளும் அளவிற்கு  நடுக்கம், ஏதோ அடுத்த நொடி மரணம் தங்களுக்கானது என்பது போல.  வீரமாதேவி! சோழர் குல திலகம்…

தென்னவர் வைத்த சுந்தர முடி – இராஜேந்திர சோழன் சிறுகதை போட்டி #17

பாண்டியர்கள் வழிவழியாய் செங்கோலோச்சிய மதுரை நகரம் பல நூற்றாண்டுகளுக்குப் பின் இத்தகைய மாபெரும் கொண்டாட்டத்தில் திளைக்கிறது. வீதி எங்கும் மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள் வாழை மரம், தென்னங்குருத்து அலங்காரங்கள் வாசல் எங்கும் வண்ணமிட்ட மாக்கோலம் என மதுரை நகரமே தன்னை அழகுபடுத்தி காத்திருந்தது. ஒவ்வொரு வீதியிலும் மக்கள் ஆட்டம், பாட்டம் என எவ்வகையில் எல்லாம்…