Category பல்லவர்

காஞ்சிபுரத்தின் வரலாறு – சங்க காலம் முதல் பல்லவர் காலம் வரை

சங்க காலத் தமிழக வரலாற்றினை அறிவதற்குத் துணை நிற்பவை சங்க இலக்கியங்களாகும். பாண்டியர் தலைநகரான மதுரையைச் சங்க இலக்கியங்கள் மதுரை, கூடல் என்ற இருபெயர் களால் சுட்டுகின்றன. அதுபோல் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியைச் சங்க இலக்கியங்கள் காஞ்சி, கச்சி என்ற இரு பெயர்களால் குறிப்பிடுகின்றன. காஞ்சி, காஞ்சிபுரம், கஞ்சி, கஞ்சிபுரம், காஞ்சீ, காஞ்சீபுரம், காஞ்சி…

ஐநூற்றுவரும், வளஞ்சியரும், நகரத்தாரும்

பாதுகாப்புக்காக மதில் நிறைந்த நகரங்கள் அமைத்து பொருட்களை பெருமளவில் குவித்து வணிகம் செய்த ஐநூற்றுவ குழுவினரில் ஒரு பிரிவினர் நகரத்தார் ஆயினர். அவர்களே இன்றைய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். மற்றொரு ஐநூற்றுவ பிரிவினர் ஐந்நூற்றுவர், வளஞ்சியர் என்று கல்வெட்டுகளில் குறிபிடப்படுகின்றனர். இவர்கள் கடற்கரையோர துறைமுக பட்டணங்களில் ஏறுமதி செய்து, வணிகம் காத்தவர் வளஞ்சியர், பட்டணவர், பட்டணஞ்செட்டி ஆயினர்.…

தனிக்கப்பல் வாங்கி வணிகம் செய்த தென்னக தமிழ் வணிகர்கள் – வணிக ஆய்வுகள்

மணிமேகலை காப்பியத்தில் தனிக் கப்பல் வாங்கி வணிகம் செய்த வணிகர் பற்றி குறிப்பு வருகிறது. “புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும் வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக் கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து” (ம.மே) அதாவது சோழனுக்கும், இலங்கைத் தீவின் ஒரு பகுதியாக…

பல்லவ செப்பேட்டின் சிறப்புகள் – கல்லெழுத்துக்கலை – நடன. காசிநாதன்

கல்லெழுத்துக்கலை – நடன. காசிநாதன் விலை: ₹250 பல்லவர் செப்பேடுகளின் பிரிவுகள் தமிழக வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து பல்லவர் காலம் இடம் பெறுகிறது. இக்காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் / நூற்றாண்டு வரை எனலாம். பல்லவர்களை, அவர்கள் வெளியிட்டுள்ள செப்பேடுகளில் காணப்படுகின்ற மொழியைக் கருத்திற் கொண்டு மூன்று வகையாகப் பிரிப்பர்…

பல்லவர் காலச் சிற்பக்கலைகள் – சிறு பார்வை – M. ஆயிஷா

சிற்பக்கலை சங்ககாலத்தில் இருந்தே செழித்து வளர்ந்த ஒரு கலையாகும். சுங்க காலத்தில் சிற்பங்கள் மண்ணாலும், மரத்தாலும், தந்தத்தாலும் உருவாக்கப்பட்டன. மண் சிற்பக்கலைஞார்கள் “மண்ணீட்டாளார்கள்” என்று அழைக்கப்பட்டனர். சுடுமண்ணாலும் மரத்தாலும் சிற்பங்கள் செய்யப்பட்டபிறகு கருங்கற்களில் உருவங்கள் செய்யப்பட்டன. இவற்றை “நடுக்கற்கள்” என்று கூறுவார்கள் போல் உயிர்நீத்த வீரார்களுக்காகவோ, உடன்கட்டை ஏறும் பெண்களுக்காகவோ வைக்கப்பட்டன. இத்தகைய நடுக்கற்களை பல்வேறு…