புராதானச் சின்னங்களான கோவில்களில் செய்யக்கூடாதவை

புராதானச் சின்னங்களான கோவில்களில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, நவம்பர் மாதம் 19 முதல் 25 தேதிகளில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடும் வேளையில் நாம், நம் அருகில் உள்ள மரபு சின்னங்களான கோவில்களை பாதுகாப்பது குறித்து அறிவது நலம்.

1. பண்டை காலத்துக் கலை முறையை மதியுங்கள். அக்காலத்து கலைஞர்கள், சிற்பிகள் மிகுந்த பக்தியுடன் கலை நுணுக்கத்துடனும் கோவில்கள் எழுப்பியுள்ளனர்.

2. நம்மைவிட குறைந்த பொருளுதவியும் வசதிகளும் தொழில்நுட்பமும் இருந்தாலும் நம்மைவிட அதிக கவனம் செலுத்தி அவற்றை எழுப்பியுள்ளனர்.

3. அவர்களது உழைப்பை நாம் உதாசினம் படுத்தக்கூடாது. எனவே முன்னர் காலத்து சின்னங்களை சீர்செய்ய அதனைப் பிரிக்கும் முன், அவர்களது கடின உழைப்பை உணருங்கள்.1526205_194664450725207_1892186188_n 4. பண்டை காலத்தில் என்ன பொருட்களை உபயோகித்தனரோ அவற்றையே உபயோகியுங்கள். 5. வெல்லம், கடுக்காய், வச்சிரம், மூலிகைகள் கலவைகள் கொண்டு கட்டப்படும் கோவில்கள்,, சுமார் 1000 அண்டுகள் நிலைத்துள்ளன. ஆனால், சிமெண்ட் கட்டிடங்கள் அதிகபட்சமாக 50-60 ஆண்டுகளே தாக்குபிடிக்கும்.

6. சுவற்றில், மதில்கள், கோபுரங்களில்; எந்த கட்டுமானங்கள் மீதும், சிறிய செடிகள், மரங்கள் கொடிகள் வளரவிடாதீர்கள். இவை கோவில்களை ஆட்டம் காண வைக்கும் கொடிய வில்லன்கள்

7. மாதம் ஒருமுறை களைகளை கண்டறிந்து, களையுங்கள்!

8. பழைய கற்களை அகற்றி செடிகளை நீக்குகையில் அதிக கவனம் தேவை

9. மழைக்குப் பின் தான், களைகள் அதிகம் வளரும். மழை காலங்களில் பழைய சுவர்கள், கோவில்களை ஏறுகையில், கவனம் தேவை. கவணக் குறைவால் அவை சரிந்துவிடலாம்.

10. வேரோடு களைய முடியவில்லை என்றால், மரக்கொல்லிகளை உபயோகியுங்கள். இடுக்குகள்,வேர் அறுத்த குழிகளை நல்ல சுண்ணாம்பு சுதை கரைசலினால் பூசி மூடிவிடுங்கள்.

11. தொடர்ந்த பாரமரிப்பே சிறந்த வழி! பழங்கால கோவில்களுக்கு தொடர் பராமரிப்பு அவசியம். எந்த சிறிய கட்டிட பழுது வேலையானாலும் உடனே கவனித்து செப்பனிட வேண்டும்.

12. கோவிலைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருங்கள்

13. தவறான பொருட்கள் உபயோகிக்காதீர்கள் 

14. கல்லால் ஆனான் கட்டுமானங்களுக்கு (கற்றளிகள்), வண்ணம் பூச பெயிண்ட், எனாமல் உபயோகோக்கக் கூடாது.

15. பெயின்ட பூச்சு நீக்குவது கடினம், தொடர்ந்து ரசாயனங்களால் துடைத்தாள், கல்லின் தன்மை மட்டுப்படும்.

16. இரசாயனம் பயன்பாடு அதிகம் கட்டிடத்தை பாதிக்கும். இராசாயனம் கலக்காத தண்ணீரைப் பீச்சி அடித்து கோவிலை சுத்தம் செய்யலாம்.

17. காவி நிறத்தை சுவர்களுக்கு உபயோகிக்காதீர்கள்; அவை கரை படிந்துவிடும்.

18. சுவர்களில், தூண்களில் காணும் கல்வெட்டுகளை மாற்றி கட்டியோ, அழித்தோ, உடையதோ விடாதீர்கள் அவற்றில் நம் பண்டை சரித்திரத்தின் பல அறிய செய்திகள் இருக்கலாம் ! அந்த எழுத்துருக்கள் எந்த வகையானாலும்,எத்தனை புராதமனவையாக இருந்தாலும் இருந்தாலும் படித்து காட்ட நம்மிடையே வல்லுனர்கள் உள்ளனர்.

19. சுவர்களின் உள்ள கல்வெட்டுகளை பாதுகாத்திடுங்கள். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று கம்பெரசர் மண் (Sand Blast) அடித்து எழுத்துருக்களை அழித்துவிடாதீர்கள். அவை நம் பாட்டன், முப்பாட்டன், சாசனம்! மீண்டும் கிடைக்காது !

20. அதேபோல் சுத்தம் செய்ய அமிலங்களையும், ப்ளீசிங் பவுடர் மற்றும் வீடு துடைக்கும் சோப்புகளை உபயோகிக்காதீர்கள். அவை சரி செய்ய முடியாத, கண்ணுக்குத் தெரியாத விரிசல்களை ஏற்படுதிவிடும் !

21. பழைய ஓவியங்கள் இருந்தால், அவற்றை சுரண்டை எடுத்து விடாதீர்கள்! பழஞ்சாரினாலும், இயற்க்கை மூலிகை நிறங்களினாலும் வரையப்பட்ட அவ்வோவியங்கள், எத்தனை கோடி கொடுத்தாலும் நம் மீண்டும் வரைய முடியாது.

22. சிதைந்து தனித்துவிடப்பட்ட கோவில்களில் பாகங்களை எரிந்து விடாதீர்கள், அவை முந்தைய அசல் கட்டிடத்தில் ஒரு பகுதியாத இருக்கலாம் அவற்றை மீண்டும் பழைய இடத்திலேயே பொருத்தலாம். உபயோகிக்கலாம்.

23. பழைய செங்கல் துகள், பழைய கோவில் சிதிலங்களை எரிந்து விடாதீர்கள். அவற்றை முழுவதுமாக அப்படியே உபயோகிக்கலாம்! இன்றைய செங்கற்களை விட அவற்றின் பலம் கெட்டித்தன்மை, 5 மடங்கு அதிகம்!

24. பழைய கோவில்களுக்கும் அசிங்கமாக வயர்களையும், எலெக்ட்ரிக் பட்டிகளையும் அடிக்காதீர்கள். கோவில்களில் அகல் விளக்குகளும், தீபங்களுமே அழகு.

25. கிரானைட், டயில்களை கர்ப்பகிரஹத்துக்குள் பதிக்கதீர்கள். கோவிலுக்கு என்று ஒரு புனிதம் உள்ளது. டையில்கள் வீட்டின் கழிவறையில் உபயோகிப்பது

26. பழைய கோவில்களில், அளவீடுவீகள் முக்கியமானவை. கருவறையின் நீள அகலமே, சிகரத்தின் உயரத்தை முடிவு செய்யும். இதில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட ஸ்தபதிகளும், வாஸ்து வல்லுனர்களும் கணக்கிட்ட சிகரம் வராது, அக்னிதம் தப்பும், புனிதமும், பலமும் கெடும்.

27. கல் கோவில்களில் சிமெண்டால் புதிய பாகங்கள் படிகளை சேர்க்காதீர்கள். பல இடங்களில். துர்க்கைக்கும், தக்ஷ்ணாமூர்த்திக்கும், பிரார்த்தனை செய்ய தொட்டு கும்பிட என, பழங்கால சுவர், சுற்று பிரகரதுக்கும் இடையே. ஒரு ஒட்டுபடி சிமெண்டால் கட்டி விடுகிறார்கள். அது கட்டிடத்தின் பலத்துக்கு எதிரானது. கட்டி சாஸ்திரத்துக்கு எதிரானது. வருங்காலத்தில் கல் சுவர் அப்படியே நிற்க, இந்த சிமெண்ட் படி விழுந்துவிட்டால், நம் வருங்கால சந்ததியர் நம்மை பார்த்து சிரிப்பார்கள்.

28. சிமெண்டை தவிருங்கள், சுதையே நல்லது. சுண்ணாம்பு அதிமாகவும், தரமாகவும் மலிவாகவும் கிடைக்கும்.

29. சிலைகளில் எண்ணெய், வெண்ணெய் நீண்ட காலமாய் தடவுதல் சிற்பங்களில் முனைகள் மழுங்கி, அழகு குறைந்துவிடும். இவற்றைத் தவிர்த்தல் நல்லது.

30. கற்பூரம் ஏற்றாதீர்கள், அதிலிருந்து வெளிப்படும் கரித்துகள்கள் கோவில் முழுவதும் அடைந்து, மாசு படிந்துவிடும், காற்றிலும் கலக்கும், நல்ல ஓவியங்கள் போன்றவற்றை பாழ் செய்துவிடும். எண்ணெய் விளக்கு, நெய் தீபாரதனையே நல்லது, அழகு; மாசு கட்டுப்பாடும் இருக்கும்.

Leave a Reply